சட்ட விரோத கட்டுமானங்களைத் தடுக்காத அரசு அதிகாரிகள் : சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
Nov 17 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்ட விரோத கட்டுமானங்களைத் தடுக்காமல், அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்டுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்திற்கு சீல் வைப்பது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரி மலைப்பகுதியை பாதுகாப்பதற்கான சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என, 2008-ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர். அதனை அமல்படுத்தியது குறித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். சட்ட விரோத கட்டுமானங்களைத் தடுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், இந்த அலட்சியம் காரணமாகத்தான் சட்டவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்வதாகவும் தெரிவித்தனர்.