உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது மற்றும் ஆன் லைன் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில அம்மா தொழிற்சங்க இணைச் செயலாளர் திரு. கலைச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் திரு. ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் திரு. திரிசங்கு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திருச்சி வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கூட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர். மனோகரன் தலைமையில், ஜீயபுரத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மகத்தான வெற்றிக்கு பாடுபடுவது என அப்போது உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் திரு. வாசு, மீனவரணி செயலாளர் திரு. அல்லூர் கணேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தெற்கு மாவட்ட செயலாளர் திரு. புவனேஸ்வரன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றிதாமஸ் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு. பி. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. P. பழனிப்பன், கழக துணைத் தலைவர் S. அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், நாமக்கல் மேற்கு மாவட்டக் கழக ஆலோசனை கூட்டம், மாவட்ட கழக செயலாளர் பி.பி. சுவாமிநாதன் தலைமையில், திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
மதுரை புறநகர் தெற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகம் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் திரு. இ. மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தலில், வீடு வீடாக சென்று கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை எடுத்துரைத்து, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி நகரில் உள்ள 33 வார்டுகளை சேர்ந்த 49 பூத்களுக்கு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பண்ருட்டி நகர கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமன படிவங்களை, பண்ருட்டி நகர கழக செயலாளர் பூக்கடை திரு. பி. சக்திவேல், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. நரசா ரெட்டியார் என்கிற பி. முத்துநரசாவிடம் இன்று வழங்கினார். இதில் நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.