நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு
Nov 15 2019 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் குத்துக்கல்வலசையில் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பொய்கை. சோ. மாரியப்பன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 83-வது நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த வருகை தரும் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி.தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்திட வேண்டும் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கும் பணியும், கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. மாணிக்கராஜா முன்னிலையில் தொடங்கப்பட்டது. கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எதிர் கோட்டை சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.