குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் : அரசு மருத்துவமனை செவிலியர் பணியிடை நீக்கம்
Nov 15 2019 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த குருசாமி-விஜயசாந்தி தம்பதியினர் திசையன்விளையில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த கிராம சுகாதார செவிலியர் மேரி தங்கம், தடுப்பூசி போட முடியாது என்று திட்டவட்டமாக கூறியதை குருசாமி செல்ஃபோனில் பதிவு செய்ததை அடுத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செவிலியரின் அராஜகம் குறித்து, மருத்துவரிடம் எழுத்து பூர்வமாக குருசாமி புகார் அளித்தார். இதுதொடர்பாக நெல்லை சமாதானபுரத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர் துறை துணை இயக்குனர் திரு. செந்தில்குமார் விசாரணை நடத்தி, செவிலியர் மேரி தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.