கும்பகோணத்தில் பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்கும்போது துப்புரவுத் தொழிலாளி பலி
Nov 15 2019 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தார். கும்பகோணம் மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்சா, வீரமணி, விபுதரன், பாக்கியராஜ் ஆகியோர், கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே உள்ள பாதாள சாக்கடையின் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட சாதிக் பாட்சா என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.