தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிப்பு : டெங்கு பாதிப்பை, வைரஸ் காய்ச்சல் என எழுதி வாங்குவதாக புகார்
Nov 15 2019 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை, வைரஸ் காய்ச்சல் என அரசு மருத்துவமனை நிர்வாகம் எழுதி வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக ஒரு வித மர்ம காய்ச்சலால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர்களிடம், மருத்துவமனை நிர்வாகம் மர்ம காய்ச்சல் என எழுதி வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, டெங்கு காயச்சல் என்றால் அதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.