கார்த்திகை தீபத்திற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் : மண்பாண்ட பொருட்கள் விற்பனைக்காக சந்தை ஏற்படுத்தித்தர கோரிக்கை
Nov 15 2019 9:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தஞ்சையில், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, தீவிரமடைந்துள்ளது.
ஒரு முக விளக்கு, இரண்டு முக விளக்கு, ஐந்து முக விளக்கு என பல்வேறு வடிவங்களில் விளக்குகளை, மண்பாண்ட தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர். மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய, அதற்கான சந்தைகளையும், குறைந்த விலைக்கு மண் கிடைக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.