திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
Nov 12 2019 7:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடுமலையை அடுத்த சுண்டகாம்பாளையம் கிராமத்தில், சுமார் ஆயிரத்து 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிக்கு கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த பத்து நாட்காளாக குடிநீர் வழங்கபடவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கோபம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொன்மனை முதல் நாகர்கோவில் வரை சாலையோரங்களில் குடிநீர் திட்ட பணிகளுக்காக, குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் சீரமைக்காத காரணத்தால் புத்தேரி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.