திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் D. பார்த்திபனின் இளைய சகோதரி உயிரிழந்ததற்கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
Oct 15 2019 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. D. பார்த்திபனின் இளைய சகோதரி திருமதி G. சாந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததற்கு கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. D. பார்த்திபனின் இளைய சகோதரி திருமதி G. சாந்தி உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
சாந்தியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.