தேர்தல் பிரச்சாரத்தில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்த அறிக்‍கையைத் தாக்‍கல் செய்யவேண்டும் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்‍கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவு

Oct 15 2019 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் பிரச்சாரத்தின்போது சீமான் சர்ச்சைக்‍குரிய வகையில் பேசியது தொடர்பாக அறிக்‍கை அளிக்‍குமாறு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்‍கு உத்தரவிட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்‍ரவாண்டி தேர்தல் பிரச்சார கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்‍குமார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில், சீமான் சர்ச்சைக்‍குரிய வகையில் பேசியது தொடர்பாக அறிக்‍கை அளிக்‍குமாறு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்‍கு உத்தரவிட்டுள்ளதாக, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில், மொத்தம் 91லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை, பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00