நாமக்‍கல்லில் நள்ளிரவில் வீடு புகுந்து தம்பதியர் படுகொலை : தப்பியோடி மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை

Oct 15 2019 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்‍கல்லில் நள்ளிரவில் வீடுபுகுந்து தம்பதியரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ். பழ வியாபாரம் செய்து வரும் இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஒராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியர் காமரஜர் நகரில் 6 மாத குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூங்கிக்‍ கொண்டிருந்த வேளையில், அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அனிதா மற்றும் விமல்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளது. இதனை தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்‍கம்பக்‍கத்தினர் ஓடி வந்ததால் கொலை கும்பல் தப்பிச் சென்றது. படுகாயமடைந்த விமல்ராஜ், அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00