அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.
வடசென்னை தெற்கு மாவட்டம் இளம்பெண்கள் பாசறை சார்பில், சென்னை சூளையில் உள்ள அங்காளம்மன் கோவில் சாலையில் கொசு வலைகள், பப்பாளி பழம், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டெங்கு பாதிப்பிலிருந்து பொதுமக்களை தடுக்கும் வண்ணம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சந்தான கிருஷ்ணன், மாவட்டக் கழக இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் சந்தியா மற்றும் நிர்வாகிகள் காஞ்சனா, ஜெயா, ராதிகா, ஜாக்குலின், அனுசியா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றிய கழகம் சார்பில், அயப்பாக்கம், ஸ்ரீ வாரு கல்யாண மண்டம் அருகே, போரூர் சுங்க சாவடி, வானகரம் உள்ளிட்ட 5 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நில வேம்பு குடிநீர், பப்பாளி ஆகியனவற்றை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. இ.லக்கி முருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.பி.ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக விவசாய பிரிவு சார்பில், நாகமலை, புதுக்கோட்டை, கீழகுயில்குடி பகுதியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. இ.மகேந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதேபோல், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய பகுதியிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி, இளநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர் திரு.பாண்டியன், அம்மா பேரவை செயலாளர் செல்வம் மற்றும் ஒன்றிய, பகுதி, வட்ட, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழகம் சார்பில், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட கழக செயலாளர் திரு. துரை.மணிவேல், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் திரு. முரளி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.