பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தது ஏன்? - மருமகளை வரவேற்க வேறொருவரின் மகளை கொல்வதா? என அ.தி.மு.க. பிரமுகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
Oct 15 2019 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருமகளை வரவேற்பதற்காக, இன்னொருவரது மகளை கொன்று விட்டீர்கள் என சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவானார். சுமார் 14 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி ஜெயகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேனர் விழுந்த பிறகு இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்தது ஏன் என கேள்வி எழுப்பியது. மருமகளை வரவேற்க பேனர் வைத்ததால், தாங்கள் இன்னொருவரது மகளை கொன்றுவிட்டீர்கள் என ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. ஜெயகோபாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.