தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் - திருத்தணி அருகே 5 வயது குழந்தை மரணம் என அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சம்
Oct 15 2019 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருத்தணி அருகே 5 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அமிர்தலிங்கம் என்பவரின் 5 வயது மகள் நத்தினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நந்தினியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், அவரது பெற்றோர் நந்தினியை வேலூருக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே சிறுமி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஜெயராம், கார்த்திகேயன், சுதர்சன், வெங்கடேச பிரசாத் ஆகிய 4 பேருக்கும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.