திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் தம்பியையே கொலை செய்து புதைத்த பெண் உட்பட 4 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை
Oct 14 2019 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குடும்பத்தகராறில் தம்பியையே கொலை செய்து புதைத்த பெண் உட்பட நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாசநாயக்கனூரை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தாமணி ஆகியோர் தங்களது மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக, திருப்பூர் மாவட்டம் உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் மூத்த சகோதரியான கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கார், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூர் அருகே கேட்பாரன்றி நின்றதால், தனது தாய், தந்தையரை காணவில்லையென, பாஸ்கர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் கடைசியாக அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற கண்ணம்மாளிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்கள் வீட்டின் பின்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்து தோண்டிப் பார்த்துள்ளனர். அப்போது, செல்வராஜ் - வசந்தாமணி தம்பதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பு வைத்தனர். இந்த கொலை தொடர்பாக, கண்ணம்மாள், அவரது மகள் பூங்கொடி உட்பட நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.