கன்னியாகுமரி - நெல்லை மீனவர்களிடையே மோதல் : சின்னமுட்டம் மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

Oct 14 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், மீன்பிடிப்பது தொடர்பாக நிலவும் பிரச்சினை குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை மாவட்ட மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பதில் பிரச்சினைகள் இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி நெல்லை மாவட்ட மீனவர்கள் படகுகள் மூலம் கடல் வழியாக வந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் இன்று முதல் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளதால் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00