திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - அண்மையில் கைதான சுரேசுக்கு 7 நாள் போலீஸ் காவல்
Oct 14 2019 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில்,
கைது செய்யப்பட்ட சுரேஷை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக மணிகண்டன், சுரேஷ், அவரது தாயார் கனகவல்லி, முருகன், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் இதுவரை 8 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.