நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் வழக்கு - சான்றிதழ்கள் சரிபார்ப்பு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.
Oct 14 2019 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டியினரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டியினரிடம், தேனி சிபிசிஐடி போலீசார் நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர். சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி பன்னீர்செல்வத்திடம் சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாணவர் இர்ஃபானை தேனி நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.