71 வயது முதியவருக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட குரல்வளையை அகற்றி மருத்துவர்கள் சாதனை
Oct 14 2019 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 71 வயது முதியவருக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட குரல்வளையை அகற்றி, மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தூத்துக்குடியினை சேர்ந்த முதியவர் கெபின், உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குரல்வளை புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவருக்கு இலவச மருத்து காப்பீடு திட்டத்தின் கீழ், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 மருத்துவர்கள் அடங்கிய குழு, சுமார் 5 மணி நேரம் போராடி புற்று நோயால் பாதிக்கப்பட்ட முதியவரின் குரல்வளை அகற்றி, உணவு குழாயை சீரமைத்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக, குரல்வளையை அகற்றும் மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.