ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக எழுந்த புகார் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
Oct 14 2019 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து திரு. சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வன்முறையைத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.