ஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அ.ம.மு.க.வினர் ஆதரவு
Sep 18 2019 9:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டத்தில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில், கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் திரு. தங்கராஜ் சந்தித்து, தண்ணீர், பிஸ்கட் வழங்கி கழகத்தின் ஆதரவை தெரிவித்தார். அப்போது பொருளாளர் திரு. சண்முகம், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பெரியார் நகர் பகுதி செயலாளர் திரு. ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.