உள்ளாட்சி தேர்தல் நடத்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
Sep 18 2019 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.