ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி புதூரில் மணமகனுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைகள் - திருமண நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த பேனர்
Sep 18 2019 8:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி புதூரில், மணமகனுக்கு 10 கட்டளைகள் விதித்து மணமகள் பேனர் வைத்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கவுந்தம்பாடி புதூரில் வைக்கப்பட்டிருந்த திருமண பேனரில், மணமகனுக்கு, மணப்பெண் விதித்துள்ளதாக 10 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. சீரியல் பார்க்கும் நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது, உறக்கத்தில் குறட்டை விடக்கூடாது, மாமியாரின் செயல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் உள்ளிட்டவை, மணப்பெண் விதித்துள்ள கட்டளைகளுக்கு உதாரணங்கள். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கட்டளைகள் அனைத்திற்கும் சம்மதம் தெரிவிப்பதாகக்கூறி மணமகன் கையெழுத்திட்டுள்ளார். திருமணத்திற்கு வந்த பலரையும் இந்த வேடிக்கையான பேனர் வெகுவாக கவர்ந்தது.