ரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு
Sep 18 2019 8:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரை செல்லும் ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, நடைமேடையில் இருந்த அதே கல்லூரியைச் சேர்ந்த எதிர்தரப்பு மாணவர்கள் சிலர், கற்கலால் தாக்க ஆரம்பித்தனர். ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி, இறங்கிய மாணவர்களும் கற்களைக் கொண்டு தாக்கினர். நடைமேடையில் இரு தரப்பினரும் மாறிமாறி கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரைக் கண்டதும், இரு தரப்பு மாணவர்களும் சிதறி ஓடினர். தாக்குதலில் ஈடுபட்ட மாநிலக்கல்லூரி மாணவர்கள் 9 பேரை மடக்கிப் பிடித்த போலிசார், எழும்பூர் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்தனர். ரயில் நிலைய நடைமேடையில் மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.