அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை மழையால் சேதம் - இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை
Sep 18 2019 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை சாகுபடி தொடர் மழையால் சேதமடைந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அமைய்கரம், வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தொடர் மழை காரணமாக நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. தண்ணீர் கிடைக்காமல் தமிழக அரசு கைவிட்ட நிலையில், ஆழ்துளைக் கிணறுகளை நம்பி, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவிட்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.