அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு - கடந்த 2 மாதத்தில் 59 ரவுடிகள் கைது : காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பேட்டி
Sep 17 2019 9:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை தடுப்பதற்காக காவல்துறை சார்பில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 மாதத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்