ராமநாதபுரம் அருகே காவி உடை அணிந்து மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
Sep 17 2019 9:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தை அடுத்த ஏர்வாடி பகுதியில் காவி உடையில் மாறு வேடமிட்டு சுற்றித்திரிந்த அப்துல் வகாப் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மநபர் ஒருவர், காவி உடையில் மாறு வேடமிட்டு சுற்றித் திரிவதாக ஏர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் வகாப் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் ஏர்வாடி ஆகிய பகுதிகளில், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஏற்கனவே இருவரை கைது செய்துள்ள நிலையில், தற்போது மாறுவேடத்தில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.