திருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் - பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Sep 17 2019 9:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 7 மாதகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மதிவாணன் தலைமையில் திருச்சி பி.எஸ்.என்.எல் நிறுவன வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதுடன் தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.