நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெள்ளநீரில் திறந்துவிடப்படும் சாய கழிவுநீர் - நுரை கலந்து வெளியேறும் தண்ணீர்
Sep 17 2019 8:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெள்ள நீரில் சாயக்கழிவு ஆற்றில் திறந்து விடப்படுவதால், திருமணிமுத்தாறில் நுரையுடன் தண்ணீர் வெளியேறுகிறது.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டி - சவுரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அருகிலேயே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால், தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில், சாயக் கழிவு நீரும் திறந்துவிடப்படுவதால், வெள்ளநீர் நுரையுடன் வெளியேறுகிறது.