உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடியபோது கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனே விடுவிக்க வேண்டும் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தல்
Sep 17 2019 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடியபோது, கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திரு. யுவராஜா தெரிவித்துள்ளார். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.