கட்டட மற்றும் மின் ஒப்பந்தங்களை ஒன்றாக ஒப்பந்தம் கோரும் அரசாணையால் ஒப்பந்ததாரர்கள், ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு - பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்
Sep 17 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கட்டட ஒப்பந்தம் கோரும் நிறுவனமே, மின் ஒப்பந்தத்தையும் எடுத்துக் கொள்ள வகை செய்யும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் மின் வாரிய ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வாரிய ஒப்பந்தம், கட்டட ஒப்பந்தம் இரண்டையும் இணைத்து ஒன்றாக டெண்டர் கோரும் அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னையில், பொதுப்பணித்துறை மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த இந்த புதிய முறைப்படி, இரு ஒப்பந்தங்களையும் ஒரே நிறுவனம் எடுத்துக் கொண்டதால், சுமார் 25 ஆயிரம் மின் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்த பணிகள் கிடைக்கவில்லை என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.