திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம். தர்ணா போராட்டம் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்போவதாகவும் எச்சரிக்கை
Sep 17 2019 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருச்சியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ள வீட்டுவரி, சொத்துவரி உயர்வை திரும்பப் பெறவேண்டும் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சொத்துவரி உயர்வால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்தால் வரிகொடா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.