புதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்திய பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்
Sep 17 2019 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில், மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்திய பெற்றோர், பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப்பளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 9 மற்றும் 10-ம் வகுப்பிற்கு கல்வி கற்பிக்கும் இவர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து ஆசிரியர் ராஜசேகர் தலைமறைவாகியுள்ளார். இதையறிந்த பெற்றோர் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.