ரயில் கொள்ளைகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தகவல்
Sep 17 2019 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்களில் கொள்ளை நடைபெறுவதை தடுக்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில், ரயில்வே பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்களுடன் இணைந்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ராகுல் ஜெயின், கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் நடைமேடைகளை நான்கில் இருந்து ஆறாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கன்னியாகுமரி- மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாவும், ரயில் கொள்ளைகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.