கல்வித்திட்டங்களில், அண்ணா, எம்ஜிஆர், அம்மா உள்ளிட்ட தலைவர்களின் வழியை மறந்து, திசைமாறிச் செல்லும் தமிழக அரசு - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு
Sep 17 2019 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்வித்திட்டங்களில், தமிழக அரசு அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் வழியை மறந்து, திசைமாறி செல்வதாக திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியார் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து திராவிடர் கழகத் தொண்டர்களுடன் பேரணியாக சென்ற திரு.வீரமணி, சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பெரியாரின் கொள்கைகள் முன்பை விட, இப்போதுதான் அதிகம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.