பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா - தந்தை பெரியார் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை
Sep 17 2019 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது ஆண்டு பிறந்தநாளையொட்டி, கும்பகோணம் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈடு இணையற்ற திராவிட சிந்தனையாளர், சமூக நீதிக்காக வாழ் நாளெல்லாம் பாடுபட்டவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று காலை கும்பகோணம் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்தார். அவருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக்கழக, கிளைக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.