மதுரையில் 4 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு : வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை
Sep 17 2019 10:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்டம் பொன்மேனி முதல் வடிவேல்கரை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மதுரை மாநகர் பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை பொன்மேனி, கொக்குழப்பி, கோச்சடை, ஏற்குடி, சம்பங்குடி, விலாச்சேரி, வடிவேல்கரை ஆகிய ஊர்களின் வழியே செல்கிறது. இந்த ஊர்களில் சாலை செல்வதால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், வீடுகள், விவசாய நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.