ராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு
Aug 22 2019 8:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சி வெள்ளாரன்விளை பகுதியில், அதிகாரிகள் பணி செய்யாமலே 8 லட்சத்து 47 ஆயிரம் ருபாய் முறைகேடு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகம் சார்பில், பெருங்குளத்தின் கரையில் ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதில், குளத்தை தூர்வாருவதற்கு, 200 ரூபாய் தினக்கூலியாக 2,527 பேர் பணி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பணிகள் செய்யாமல் நிதியை அதிகாரிகளே கையாடல் செய்துள்ளதாக வேதனை தெரிவித்தனர். ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.