ஒவ்வொரு காவலரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் : திருச்சி மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்
Aug 22 2019 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாநகரில் பணியாற்றும் காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ், ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், ஒவ்வொரு காவலரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.