வேலூர், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 22 2019 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம், மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர்வரை காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை,
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு வேளையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.