சுவர் ஏறி குதித்து கைது செய்ததற்கு ப.சிதம்பரம் ஒன்றும் பயங்கரவாதி அல்ல : திருமாவளவன் கடும் கண்டனம்
Aug 22 2019 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் ஒன்றும் பயங்கரவாதி அல்ல என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன், வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க.-வை பற்றி அவர் விமர்சனம் செய்து வந்ததால், பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்தார்.