திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர், எம்.எல்.ஏ. ஆதரவாளர் மோதல் : ஆளும்கட்சியினரின் மோதலால் பொதுமக்கள் அதிருப்தி

Aug 20 2019 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளரும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ வி.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுவள்ளூர் ஊராட்சி செயலாளரை இடம் மாற்றம் செய்வதற்காக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ வி.பன்னீர்செல்வம் முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த தகவலை அறிந்த அதிமுக விவசாய அணி செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கிராம மக்களை அழைத்து சென்று தங்களுடைய ஊராட்சி செயலாளரை மாற்றக்‍கூடாது என்று மனு கொடுத்தனர். அதனை அறிந்த எம்.எல்.ஏ வி.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த இருதரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00