மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் வைகோ - நலமுடன் இருப்பதாக தொண்டர்களுக்கு தகவல்
Aug 19 2019 6:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உடல்நலம் குன்றியதால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ இன்று அங்கிருந்து வீடு திரும்பினார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற மதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்காக வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோவிற்கு திடீரென உடலநலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கே.கே.நகர் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த அழுத்த குறைபாடு பிரச்சனை உள்ளதால், தொடர் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தினர். இதனையடுத்து இன்று காலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்களின் ஆலோனைப்படி சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக சென்னை செல்கிறேன் என்றார்.
மத்திய அரசு மொழி பாகுபாடு பார்ப்பதில்லை என செல்லூர் ராஜு கூறியிருப்பது குறித்து பேசிய அவர், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்ற வெறியில் மத்திய அரசு செயல்படுகிறது என விமர்சித்தார்.