கடனை அடைக்‍க முடியாமல் விவசாயிகள் திணறும்போது, விவசாயத்தை அழிக்‍கும் திட்டத்தை செயல்படுத்துவதா? - இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டில் டிடிவி தினகரன் மத்திய அரசுக்‍கு கண்டனம்

Aug 18 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்டா பகுதி விவசாயிகள் ஏற்கெனவே தங்களது விவசாய கடனை அடைக்‍க முடியாமல் திண்டாடும்போது, அங்கு விவசாயத்தை முற்றிலும் அழிக்‍கும் திட்டங்களை செயல்படுத்துவதா? என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் இயற்கை வளம் மற்றும் கனிமவள பாதுகாப்பு மாநாட்டில் திரு.டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார். டெல்டா பகுதியில் எப்போது ஓ.என்.ஜி.சி. திட்டத்தை அனுமதித்தோமோ அப்போதே 3 போக விவசாயம் முடிவுக்‍கு வந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். தானும் ஒரு சோழ நாட்டை சேர்ந்தவன் என குறிப்பிட்ட அவர், விவசாய நிலங்களை பறிக்‍கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்‍க முடியாது என திட்டவட்டமாக கூறினார். டெல்டா பகுதி விவசாயிகள் ஏற்கெனவே வங்கிகளில் பெற்ற விவசாய கடனை அடைக்‍க முடியாமல் திணறும் வேளையில், அங்கு விவசாயத்தை அழிக்‍கும் அராஜக திட்டங்களை மத்திய அரசு எப்படி செயல்படுத்தலாம் என கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00