சேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு - தனியார்மயமாக்கலுக்கு எதிராக குடும்பத்தினருடன் அமர்ந்து 14ம் நாளாக இன்றும் போராட்டம்
Aug 18 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதைக் தடுக்கும் வகையில், இரும்பாலை தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாயருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. டெண்டர் கோரும் தனியார் நிறுவனத்தினர், ஆலையை பார்வையிட வருவதை தடுக்கும் நோக்கில், உருக்காலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர், ஆலையின் பிரதான நுழைவு வாயிலில் கடந்த 13 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளனர்.
ஆலையின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு அமர்ந்துள்ள தொழிலாளர்கள், மத்திய பா.ஜ.க அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.