சென்னையில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி : தொடங்கி வைத்தார் நடிகை ரேவதி
Aug 18 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பழமையான கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற இந்த கண்காட்சியை, திரைப்பட நடிகை ரேவதி தொடங்கி வைத்தார். நாடு முழுவதிலும் இருந்து பழமையான 140 கார்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன. பழமையான கார்களின் கண்காட்சி காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாகவும், எப்படி தயாரித்து இருப்பார்கள் என வியந்து பார்ப்பதாகவும் நடிகை ரேவதி தெரிவித்தார்.
பழமையான கார்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆண்டுதோறும் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.