சென்னை காசிமேட்டை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு - மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார்
Aug 18 2019 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காசிமேடு மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து, அவர்களது படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காசிமேட்டில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீனிவாசபுரம் அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது காசிமேடு மீனவர்களை, ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தும், அவர்களது படகுகளை சேதப்படுத்தி, மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில், மீனவர்களின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.