காஷ்மீர் விவகாரம் - வீட்டுச்சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் : ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை
Aug 18 2019 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீட்டு சிறையில் உள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் 370, 35ஏ பிரிவுகளை நீக்கி, எதிர்காலத்தில் பெரும் அழிவு ஏற்பட மத்திய அரசு காரணமாகிவிட்டதாகவும், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாகவும், தொலைபேசி இணைப்புகள் செயல்பட தொடங்கிவிட்டதாகவும் மத்திய அரசு பச்சை பொய்யை சொல்வதாகவும் திரு.வைகோ குற்றம் சாட்டினார்.