கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு : தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

Aug 17 2019 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 41 புள்ளி ஒன்பது எட்டு அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 580 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 580 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுளது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்த கோட்டா, ஆழியாளம், கோப சந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00