ஸ்ரீவில்லிபுத்தூரில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி - 6 பேர் காயம்
Aug 17 2019 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த 3 பேர், குற்றாலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில், எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மதுரையைச் சேர்ந்த யாஷிப், முகமது பிலால் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணம் செய்த 6 பேர், லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.